இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் ஸ்டார்மருடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன் போது கருத்து வெளிளிட்ட ட்ரம்ப்,
“ நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளேன், நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை கொண்டுள்ளேன். அண்மையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க நான் அவரிடம் தொலைபேசியில் பேசினேன்.
எங்களுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு, அவர் ஒரு அழகான பதில் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் நான் அவர்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன்.
உக்ரேனுடனான தற்போதைய மோதலில் புதின் எனக்கு ‘மிகப்பெரிய ஏமாற்றம்’ தந்துள்ளார். மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் மூலம் கிடைக்கும் வருமாம் குறைந்தால், புடின் போரை விட்டு வெளியேறிவிடுவார். அவருக்கு வேறு வழியில்லை. சீனா தற்போது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய வரியை செலுத்துகிறது, ஆனால் நான் இன்னும் சில தடைகளையும் விதிக்க தயாராக இருக்கிறேன். எண்ணெய் மூலமான வருவாய் குறைந்தால், மிக எளிமையாக, ரஷ்யா இந்த போருக்கு தீர்வு காணும்.
நாங்கள் இதுவரை ஏழு மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தோம், அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கக்கூடியவை என்று முதலில் கருதப்படவில்லை. நாங்கள் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தோம், அது இரண்டு அணுசக்தி நாடுகள் என்றார்.